1 38
இலங்கைசெய்திகள்

அநுரவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க தயாராகும் கொரியா

Share

அநுரவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க தயாராகும் கொரியா

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க தயார் என கொரிய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கக் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும், கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கவும், இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் தயார் என கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ள நிலையில், பல நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் வழங்கப்படவுள்ள உதவிகளை தொடர்பிலும் அறிவித்துள்ளன.

இதேவேளை ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஆதரவும் வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...