யாழ்.மாவட்டத்தில் கொடுவா மீன் வளர்ப்பு

fish 1

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அடையாளம் காணப்பட்ட பகுதியில் கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் முயற்சியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தனியார் முதலீட்டுடன் பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதில் முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்பு தொழில் முயற்சியை மேற்கொள்ள தலா 25 லட்சம் ரூபா முதலீட்டு உதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயனாளிகளுக்கு மீன்வளர்ப்பு பயிற்சி வழங்குதல், விற்பனை செய்யும் சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

Exit mobile version