14
இலங்கைசெய்திகள்

போலி விசேட அதிரடிப்படையினரால் பெருந்தொகை பணமோசடி

Share

போலி விசேட அதிரடிப்படையினரால் பெருந்தொகை பணமோசடி

புத்தளம் – வென்னப்புவ பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி உட்பட இருவரை கடத்திச்சென்று இரண்டு கோடி ரூபா மற்றும் இரத்தினக்கல்லை கொள்ளையடித்த கும்பலை கண்டுபிடிக்க பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சீருடைக்கு நிகரான ஆடைகளை அணிந்திருந்த 8 பேர் அடங்கிய குழு இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி தனது நண்பருடன் சீதுவ பிரதேசத்திற்கு மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்ய வந்துள்ளார்.

சீதுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்று கொண்டிருந்த போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று வந்து மாணிக்க வர்த்தகரையும், அவரது நண்பரையும் வானில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது மாணிக்கக்கற்களையும், இரண்டு கோடி ரூபா பணத்தினையும் எடுத்துக்கொண்டு நடுவீதியில் விட்டுச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில் சீதுவ பொலிஸில் வர்த்தகர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல பொலிஸ் குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் கொள்ளையர்கள் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அல்ல எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...