14
இலங்கைசெய்திகள்

போலி விசேட அதிரடிப்படையினரால் பெருந்தொகை பணமோசடி

Share

போலி விசேட அதிரடிப்படையினரால் பெருந்தொகை பணமோசடி

புத்தளம் – வென்னப்புவ பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி உட்பட இருவரை கடத்திச்சென்று இரண்டு கோடி ரூபா மற்றும் இரத்தினக்கல்லை கொள்ளையடித்த கும்பலை கண்டுபிடிக்க பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சீருடைக்கு நிகரான ஆடைகளை அணிந்திருந்த 8 பேர் அடங்கிய குழு இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி தனது நண்பருடன் சீதுவ பிரதேசத்திற்கு மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்ய வந்துள்ளார்.

சீதுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்று கொண்டிருந்த போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று வந்து மாணிக்க வர்த்தகரையும், அவரது நண்பரையும் வானில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது மாணிக்கக்கற்களையும், இரண்டு கோடி ரூபா பணத்தினையும் எடுத்துக்கொண்டு நடுவீதியில் விட்டுச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில் சீதுவ பொலிஸில் வர்த்தகர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல பொலிஸ் குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் கொள்ளையர்கள் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அல்ல எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...