செய்திகள்அரசியல்இலங்கை

விவசாயிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறது ஐ.ம.ச: அமைச்சர் சாடல்

Arundika Fernando
Share

விவசாயிகளை வீதியில் இறக்கி, அவர்கள் மூலம் அரசியல் பிழைப்பு நடத்துகிறது ஐக்கிய மக்கள் சக்தி.” என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“இரசாயன உரப் பயன்பாட்டை கைவிட்டு, சேதன பசளை மூலமான விவசாயத்தை நோக்கி உலக நாடுகள் பயணிக்கின்றன. இரசாயன உரம் என்பது நஞ்சு. எமது மக்களைக் காக்க நாமும் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்கின்றோம். அதற்காகவே உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில் விவசாயிகளை தூண்டிவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் அவர்களின் போராட்டங்கள் ஊடாகவும் அரசியல் செய்கின்றது.

இரசாயன உரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு, ஆனால் எதற்காக தற்போது இரசாயன உரத்துக்கு குரல் கொடுக்கின்றனர் என்றும் தெரியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...