கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவம்
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவம்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவம்

சமகாலத்தில் இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை 15,000ஐ அண்மித்துள்ளது.

விமான நிலைய தகவல்களுக்கு அமைய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 3 இடங்களில் புறப்படும் பயணிகளுக்கு ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வதனால் போக்குவரத்து மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு 2 இடங்களில் மட்டும் சிறப்பு ஸ்கேன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 446 கமராக்களில் இருந்து பெறப்பட்ட படங்கள் உட்பட பாதுகாப்பு CCTV கமரா அமைப்புடன் கூடிய குழு மூலம் 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புறப்படும் மற்றும் வருகை முனையங்களில் சாதாரண உடையில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மூன்று ஆயுதப்படைகள் அடங்கிய குழுக்கள் பணியாற்றி வருவதாக விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...