28 11
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டமைக்காக காரணம் வெளியானது!

Share

பிரித்தானியாவின் ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட், கட்டுநாயக்கவில் இயங்கி வந்த தமது தொழிற்சாலையை, திடீரென மூடியமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் காரணமாக, தமது தொழிற்சாலை பல ஆண்டுக்காகவே, இலாபமற்ற நிலையில் இயங்கி வந்ததாக, நெக்ஸ்டின் உற்பத்தித்துறை பணிப்பாளர் டேவிட் ரே தெரிவித்துள்ளார்.

எனவே இந்த தொழிற்சாலையை மூடுவது தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கையில் உள்ள தமது மேலும் இரண்டு தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை அடுத்து, தமது தொழில்களை இழந்துள்ள 1,400 தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக மண்டலத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை, கடந்த செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

அத்துடன் ஒரே இரவில் தொழில்களை இழந்த 1,416 ஊழியர்களுக்கு பணிநீக்கப் பொதிகளை வழங்குவதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

எனினும், ஆலோசனை இல்லாமல் மூடப்பட்டது ஒரு கூட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கையின் ஆடைத்தொழில்துறையில் சுமார் 350,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த தொழில்துறை மூலம், கடந்த ஆண்டு 4.76 பில்லியன் டொலர் வருமானத்தை இலங்கை பெற்றுக்கொண்டது.

Share
தொடர்புடையது
30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...

27 11
இலங்கைசெய்திகள்

மகிந்த – கோட்டாபய சகாக்களுடன் அநுர தரப்பு பேச்சுவார்த்தை

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுடன்...

26 12
இலங்கைசெய்திகள்

சிங்கள பேரினவாதிகளின் செயற்பாட்டினால் கோரப்பட்ட தமிழீழம்

தனி நாடு கோரி ஒரு இனம் போராடிய வரலாற்றை இந்த நாடு கொண்டுள்ளது என்றும், நாட்டில்...