18 1
இலங்கைசெய்திகள்

கருணா – பிள்ளையானுக்கு அநுர தரப்பு பகிரங்க சவால்!

Share

கருணா – பிள்ளையானுக்கு அநுர தரப்பு பகிரங்க சவால்!

வரலாற்றில் முக்கியமான மாற்றத்திற்கு கிழக்கு மாகாணம் தயாராகி வருவதாகவும், கருணா – பிள்ளையான் யார் வந்தாலும் இதனை தடுக்க முடியாது எனவும், தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti ) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மட்டக்களப்பில் பழைய அரசியல்வாதிகள் பழைய கதைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அநுரகுமாரவை தெரியும் என இங்குள்ள அரசியல் தலைமைகள் கூறினாலும், அரசாங்கத்தில் அவர்களுக்கு இடமில்லை. குறிப்பாக மட்டக்களப்பில் பிள்ளையானின் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது.

மேலும், அரசு சலுகைகளை பாவித்தே ரணில் விக்ரமசிங்க பிரசாரம் செய்து கொண்டார்.

அவ்வாறே சஜித் பிரேமதாசவும், பிரசார செயலை முன்னெடுத்திருந்தார்.

அவர்கள் ஆட்சி அமைக்க முடியாத காரணத்தால் மக்கள் மத்தியில் எங்களைப் பற்றி ஒரு பயத்தை உருவாக்கியிருந்தனர்.

ஜோன்சன் பெர்னான்டோ, லொஹான் ரத்வத்த போன்றோருக்கு, அதிகாரத்தின் மூலம் இனிமேல் களவாட முடியாது.

அவர்கள் நீதிக்கு முன்னால் வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இது ஆரம்பம் மாத்திரம்தான்.

அரச காரியாலயங்களில் ஜனாதிபதியின் உருவப்படம் பொறித்த புகைப்படங்கள் அமைந்திருக்கும்.

தற்போது எவருடைய படமும் இல்லை, கிரம உத்தியோகஸ்த்தர் காரியாலயம் தொடக்கம் உயர் நீதிமன்றம் வரை ஜனாதிபதிகளின் படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

இப்போது அவ்வாறு படங்கள் இல்லை என்பதற்கான காரணங்கள் என்ன? அரச ஊழியர்களுக்கு அரசாங்க தலையீடு இனி இல்லை என்பதை அறிவிப்பதே.

நீண்ட காலத்துக்கு பின்னர் நிதானமான ஒரு நம்பிக்கையான சூழல் உருவாகி இருக்கின்றது’’ என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...