Ranil Karu
அரசியல்இலங்கைசெய்திகள்

20ஐ உடன் நீக்குங்கள்! – ரணிலுக்குக் கரு அணி கடிதம்

Share

நாட்டு மக்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்துவதற்கும், 20 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முன்னாள் சபாநாயகரும் சமூக செயற்பாட்டாளருமான கரு ஜயசூரிய தலைமையிலான 155 சமூகச் செயற்பாட்டாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்துமூலமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மீதும் அவர் தலைமையிலான அரசின் மீதும் தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசு ஒன்று நிறுவப்பட்டது. எனினும், இந்த இடைக்கால அரசுக்கும் பொதுமக்கள் மத்தியில் அதிகமான எதிர்ப்பு எழுந்திருக்கின்றது. இந்நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான 155 பேர் இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் அங்கீகரிக்கக்கூடிய அரசை அமைத்து நிவாரணங்களை வழங்குமாறும் கருஜயசூரிய உள்ளிட்ட 155 சிவில் சமூகப்பிரதிநிதிகள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9b2f6990 46c6 11f0 8fec b11f321e9298
செய்திகள்உலகம்

ரஷ்யா – உக்ரைன் போர்: 30 ரஷ்ய வீரர்களுக்கு ஈடாக 1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

ரஷ்யாவிடமிருந்து 1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்களைப் பெற்றதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இது போரில் ஈடுபட்டுள்ள...

1756946218 Scholarship Examination 2025 Sri Lanka Ada Derana 6
இலங்கைசெய்திகள்

6ஆம் வகுப்பு மாணவர் சேர்கைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்கான 6ஆம்...

23 63e7213579bd6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். துணைவேந்தர் தெரிவு சர்ச்சை நீங்கியது; 7 விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்க மானியங்கள் ஆணைக்குழு வழிகாட்டல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு, யாழ். பல்கலைக்கழகப்...

image 79b3cf76e5
இலங்கைசெய்திகள்

பாறை சரிவால் தடைப்பட்டிருந்த பதுளை ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது!

மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பாறை சரிவால் தடைப்பட்டிருந்த பதுளைக்கான ரயில் சேவை இன்று (நவம்பர்...