Screenshot 2025 11 26 201240
இலங்கைசெய்திகள்

கரவெட்டி பிரதேச சபை ஏற்பாட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி: முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றினார்!

Share

கரவெட்டிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில், நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலியான மில்லரின் தாயார் கலந்துகொண்டு ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் பங்கேற்ற ஏனையோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் முகமாக இந்தப் பிரத்தியேகமான நிகழ்வு கரவெட்டிப் பிரதேச சபையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...