tamilni 118 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த ஆறு வயது சிறுவன்

Share

களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெலவத்த நெலுவ வீதியில் தேயிலை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றில் வீழ்ந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவித்தனர்.

யட்டபான 9 மைல்கல் பகுதியில் வசிக்கும் ஆதித்ய புன்சர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

பெலவத்தையில் இருந்து தினியாவல நோக்கி பயணித்த லொறி யட்டபாத 9 மைல்கல் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் மெகதன்ன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...