பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்
இலங்கைசெய்திகள்

பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்

Share

பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மல்வான மாளிகை தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ‘அரகலயா’ போராட்டத்தின் போது இந்த மாளிகை அரசுக்கு சொந்தமானது என்பதை அறியாமல் எரிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த மாளிகையை நீதி அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதியமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்

இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்,“மல்வானை சொத்துக்கு எந்தவொரு தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பதை நான் செய்தித்தாள்கள் மூலம் அறிந்ததும், அதை நீதியமைச்சிடம் ஒப்படைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மறுநாள் சமர்ப்பித்தேன்.

அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான செயல்முறை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இது நீதித்துறை அமைச்சகத்தால் கையகப்படுத்தப்படும்.

துரதிர்ஷ்டவசமாக, அரகலயா ஆர்வலர்கள் அதைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். ஒருவேளை அது இப்போது அரசின் சொத்து என்பது தெரியாமல் அதை தீயிட்டுருக்கலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...