பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்
இலங்கைசெய்திகள்

பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்

Share

பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மல்வான மாளிகை தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ‘அரகலயா’ போராட்டத்தின் போது இந்த மாளிகை அரசுக்கு சொந்தமானது என்பதை அறியாமல் எரிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த மாளிகையை நீதி அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதியமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்

இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்,“மல்வானை சொத்துக்கு எந்தவொரு தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பதை நான் செய்தித்தாள்கள் மூலம் அறிந்ததும், அதை நீதியமைச்சிடம் ஒப்படைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மறுநாள் சமர்ப்பித்தேன்.

அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான செயல்முறை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இது நீதித்துறை அமைச்சகத்தால் கையகப்படுத்தப்படும்.

துரதிர்ஷ்டவசமாக, அரகலயா ஆர்வலர்கள் அதைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். ஒருவேளை அது இப்போது அரசின் சொத்து என்பது தெரியாமல் அதை தீயிட்டுருக்கலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...