பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்
இலங்கைசெய்திகள்

பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்

Share

பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மல்வான மாளிகை தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ‘அரகலயா’ போராட்டத்தின் போது இந்த மாளிகை அரசுக்கு சொந்தமானது என்பதை அறியாமல் எரிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த மாளிகையை நீதி அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதியமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்

இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்,“மல்வானை சொத்துக்கு எந்தவொரு தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பதை நான் செய்தித்தாள்கள் மூலம் அறிந்ததும், அதை நீதியமைச்சிடம் ஒப்படைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மறுநாள் சமர்ப்பித்தேன்.

அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான செயல்முறை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இது நீதித்துறை அமைச்சகத்தால் கையகப்படுத்தப்படும்.

துரதிர்ஷ்டவசமாக, அரகலயா ஆர்வலர்கள் அதைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். ஒருவேளை அது இப்போது அரசின் சொத்து என்பது தெரியாமல் அதை தீயிட்டுருக்கலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...