tamilni Recovered 9 scaled
இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனுர ஆட்சியில் நீதி : பிமல் ரத்நாயக்க பகிரங்கம்

Share

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனுர ஆட்சியில் நீதி : பிமல் ரத்நாயக்க பகிரங்கம்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி (JVP) அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) வெளியிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் தெற்கில் வாழும் மக்களுக்கும், வடக்கு – கிழக்கு மலையக வாழ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இன, மத, சாதி, நிற பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும்.

வடக்கில் போரினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது, ஆனால் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. எனவே எங்கள் அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும்.

யுத்த காலத்தின் பின்னர் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவம் விட்டுச் சென்ற போதிலும் அவர்களுக்கு அந்த காணிகள் உரியதாக இல்லை, அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும், அதனை பாதுகாக்கும் நாடு என்பதை உணர வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...