12 28
இலங்கைசெய்திகள்

எனது பாதையில் அநுரவும் பயணம்..! ரணில் புகழாரம்

Share

எனது பாதையில் அநுரவும் பயணம்..! ரணில் புகழாரம்

நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் இந்தியாவிலிருந்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “நான் முன்னெடுத்த வேலைத்திட்டங்களையும், நான் ஆரம்பிக்கவிருந்த அபிவிருத்திகளையும் முன்கொண்டு செல்ல தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திடசங்கற்பம் பூண்டுள்ளார்.

அதனை அவர், தனது உத்தியோகபூர்வ முதலாவது வெளிநாட்டுப் பயணமான இந்திய விஜயத்தின்போது வெளிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் நலன் கருதிய அநுரகுமாரவின் செயற்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அவரும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமையச் செயற்படுவார் என்றும் நான் நம்புகின்றேன்.

இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை முழுமையாகத் தீர வேண்டும். அபிவிருத்தி முழுமை பெற வேண்டும். அதன்பின்னர் ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது சுலபமாக இருக்கும்.

ஜனாதிபதி அநுரகுமார உறுதியளித்ததன் பிரகாரம் 2025 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் இந்தத் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது. அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் அநுரகுமார வழங்கிய சகல வாக்குறுதிகளையும் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும்.

அப்போதுதான் அவர் மீது முழு நம்பிக்கை இலங்கை மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...