இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலார் ஜீவன் தொண்டமான், தான் வகித்து வந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன், அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்வது தொடர்பிலும் இன்று விசேட அறிவிப்பை அக்கட்சி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததால், அரசுக்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என அண்மையில் ஜீவன் தொண்டமான் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews