ஜீவன் தொண்டமான்
அரசியல்இலங்கைசெய்திகள்

நடுநிலை நிலைப்பாட்டை மாற்றுமா இ.தொ.கா.?

Share

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்படவுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அவர்களது நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான திட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தினாலேயே நடுநிலையாகச் செயற்படப் போவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்திருந்தது. எனினும், எதிர்த்தரப்பினர் தமது திட்டங்களை அறிவித்தால் எமது முடிவையும் அறிவிப்போம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எமக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனாலும், அவர்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எவ்வித தெளிவுபடுத்தல்களும் எமக்கு வழங்கப்படவில்லை. அடுத்தகட்ட நகர்வு குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்திலேயே அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்லமுடியும். இருப்பினும் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் எதிர்க்கட்சியினரால் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.

எதிர்த்தரப்பினரின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுக்கும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...