18 19
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஜப்பானின் தற்போதைய நிலைப்பாடு

Share

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஜப்பானின் தற்போதைய நிலைப்பாடு

இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளையும், நாட்டின் பொருளாதார நிலையையும் முதலில் ஆராய்ந்த பின்னரே இலங்கையில் புதிய திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஜப்பான் பரிசீலிக்கும் என்று ஜப்பானிய (Japan) தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும் கடன் மறுசீரமைப்பிற்குப் பின்னர், முன்னர் ஆரம்பிக்கப்பட்ட 11 திட்டங்களை மேற்கொள்வதே தமது முன்னுரிமை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் ஜப்பான் புதிய திட்டங்களை உறுதியளித்துள்ளதா என்ற கேள்விக்கே தூதரகம் இந்த பதிலை வழங்கியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் 11 திட்டங்களின் நிலை குறித்து கருத்துரைத்துள்ள தூதரகம், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டம் உட்பட பெரும்பாலானவை சுமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜப்பானிய நிதியுதவியுடன் களு கங்கை நீர் வழங்கல் விரிவாக்கத் திட்டம், அனுராதபுர வடக்கு நீர் வழங்கல் திட்டம், கண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவத் திட்டம், மேல் மாகாண திண்மக் கழிவு முகாமைத்துவத்தை உருவாக்குவதற்கான திட்டம், திறன் அபிவிருத்திக்கான திட்டம், நகர்ப்புற திட்டமிடல், நீர் பொறியியல் மற்றும் பயன்பாட்டு மேலாண்மை எதிர்கால தலைவர்கள் பயிற்சி திட்டமும்,

மனித வள மேம்பாட்டுக்கான திட்டம் புலமைப்பரிசில், பயனுள்ள பொது முதலீட்டு முகாமைத்துவத்திற்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டம், டெரஸ்ட்ரியல் டிவி ஒளிபரப்பு திட்டத்தின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள மீன்பிடி மற்றும் விவசாய கிராமங்கள், பால்வள மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2024, ஜூலை 22 அன்று இலங்கை தொடர்பில் அனைத்து அதிகாரபூர்வ கடன் குழு உறுப்பினர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து ஜப்பான், இலங்கையில் அதிகாரபூர்வமாக 11 கடன் திட்டங்ககளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்தது.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...