19 12
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள விவசாய நிலங்கள்!

Share

சீரற்ற காலநிலையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள விவசாய நிலங்கள்!

கடும் மழையுடன் கூடிய காலநிலையால் சுமார் 375,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜசிங்க ஆராச்சி தெரிவித்துள்ளார்.

வெள்ள நிலைமை தொடர்பில் இன்று(30.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி வெள்ள நீர் வழிந்தோடிய பிறகு பயிர்களின் சேதம் குறித்து மதிப்பிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டமே அதிகளவிலான சேதத்தை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெள்ளத்தினால் அழிவடைந்த 06 வகையான பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

அதன்படி, நெல், சோளம், வெங்காயம், சோயா, ஆகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது எனவும், முழுமையாக சேதமடைந்த விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...