முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்
இலங்கைசெய்திகள்

முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்

Share

முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) புதிய தலைவராக துமிந்த ஹுலன்கமுவ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 184 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே துமிந்த ஹுலன்கமுவ புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

அதேவேளை இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உபதலைவர் மற்றும் பிரதி உபதலைவராக முறையே ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா மற்றும் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமல் தெவரதந்த்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க மேற்படி வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிஸுகோஷி, அவரது உரையின்போது சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாகப் பல்வேறு மறுசீரமைப்பு செயற்திட்டங்களைப் பூர்த்திசெய்யவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

‘முக்கிய மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நிதியியல் உறுதிப்பாடு எட்டப்படுவதுடன், அதன்மூலம் முதலீடுகளில் முன்னேற்றம் மற்றும் வணிகங்களுக்கு ஏற்றவாறான சாதகமான சூழல் ஆகியவற்றை அடைந்துகொள்ளமுடியும். வெளிப்படைத்தன்மையையும் செயற்திறனையும் இடைவிடாத்தன்மையையும் மேம்படுத்தக்கூடிய அத்தகைய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு ஜப்பான் வலுவான ஒத்துழைப்பை வழங்கும்’ என்றும் ஹிடேகி மிஸுகோஷி உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும் கடன் வழங்குனர் நாடாக மாத்திரமன்றி, இலங்கையின் நீண்டகால நட்புநாடு என்ற ரீதியில் இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் ஜப்பான் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...