24 6607f8a0c301c
இலங்கைசெய்திகள்

யாழ் கோவிலொன்றில் தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளதா

Share

யாழ் கோவிலொன்றில் தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளதா

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் பகுதியிலுள்ள நல்லிணக்கபுரம் எனும் இடத்தில் கோயிலையும் மக்கள் குடியிருப்பையும் பிரித்து தீண்டாமை சுவரொன்று கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தை சுற்றி ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் இருப்பதாகவும், இவர்களிடமிருந்து பிரிக்கும் நோக்கிலேயே இந்த சுவர் எழுப்பப்ட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஆலயத்தை பாதுகாக்கும் நோக்கில் கட்டப்படும் மதிலை விட ஆலயம் வெளியில் தெரியாத வகையில் மதில் கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆலயத்தின் முன் பகுதியே இவ்வாறு மறைக்கப்பட்டு மதில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தற்போது தாம் பல துன்பங்களையும் நோய்களையும் அனுபவிப்பதாக நம்புவதாகவும் ஆலயத்தை அண்டியுள்ள பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மற்றொரு தரப்பினர் இந்த மதில் சுவரானது தீண்டாமை நோக்கத்திற்காக கட்டப்பட்டது அல்ல எனவும், ஆலயத்தை பாதுகாக்கும் நோக்கில் கட்டப்பட்ட மதில் எனவும் குறிப்பிடுகின்றனர்.

பல வருடங்களாக யுத்தத்தில் அவதியுற்று பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து தற்போது அனைத்து மக்களுக்கு ஓர் வாழ்க்கையை தமக்கென அமைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தாற்றபோதும் கூட யாழில் சிலர் இவ்வாறு தீண்டாமை மற்றும் சாதியை மையப்படுத்தி மக்களை பிரித்துப்பார்ப்பது மற்றுமொரு அழிவிற்கு வழிவகுக்கும் என பிரதேசவாசி ஒருவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...