Screenshot 20221022 131017
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலை தொழில்நுட்ப பீடத்தின் ஆய்வு மாநாடு

Share

புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping  the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் (JUICE – 2022) தொடரில், தொழில்நுட்ப பீடத்தினால் நடாத்தப்பட்ட “ TechInn)Technological Advancement and Innovations – தொழில்நுட்ப முன்னேற்றமும், புத்தாக்கமும்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு நேற்று ( 21 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொழில் நுட்ப பீடத்தின் ஆய்வுத் தலைவரும், பீடாதிபதியுமான பேராசிரியர் சிவமதி சிவச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆய்வு மநாட்டில் பல்கலைக்கழக ஆய்வுத் தலைவரும், துணைவேந்தருமான பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, 2022 ஆய்வு மாநாட்டின் வழிப்படுத்துநர் கலாநிதி எஸ். கௌதமன், ஆய்வு வெளியீடுகளின் மநாட்டின் பிரதம ஆசிரியர் பொறியியலாளர் டி.எச்.டீ.ஏ.ஈ. ஜெயசிங்க, மாநாட்டின் இணைச் செயலாளர் கலாநிதி டி.எச்.கே நவரட்ண ஆகியோர் அரங்கை அலங்கரித்தனர்.

இந்த மாநாட்டின் முதன்மை உரையாளராக இலங்கை பசுமைக் கட்டுமானப் பேரவை (Green Building Council of Sri Lanka) யின் தலைவரும், பேராதனைப் பல்கலைக்கழக குடிசார் பொறியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க கலந்து கொண்டு “பசுமை சார் கண்டுபிடிப்புகளும், தொழில் முனைவுகளும் – Green Innovation and Entrepreneurship” என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றினர். ஆய்வு மாநாட்டுக்கென முன்வைக்கப்பட்ட 52 ஆய்வுகளில், ஏற்றுக்கொள்ளப்பட்ட 37 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந் நிகழ்வில், பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...