Screenshot 20221022 131017
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலை தொழில்நுட்ப பீடத்தின் ஆய்வு மாநாடு

Share

புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping  the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் (JUICE – 2022) தொடரில், தொழில்நுட்ப பீடத்தினால் நடாத்தப்பட்ட “ TechInn)Technological Advancement and Innovations – தொழில்நுட்ப முன்னேற்றமும், புத்தாக்கமும்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு நேற்று ( 21 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொழில் நுட்ப பீடத்தின் ஆய்வுத் தலைவரும், பீடாதிபதியுமான பேராசிரியர் சிவமதி சிவச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆய்வு மநாட்டில் பல்கலைக்கழக ஆய்வுத் தலைவரும், துணைவேந்தருமான பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, 2022 ஆய்வு மாநாட்டின் வழிப்படுத்துநர் கலாநிதி எஸ். கௌதமன், ஆய்வு வெளியீடுகளின் மநாட்டின் பிரதம ஆசிரியர் பொறியியலாளர் டி.எச்.டீ.ஏ.ஈ. ஜெயசிங்க, மாநாட்டின் இணைச் செயலாளர் கலாநிதி டி.எச்.கே நவரட்ண ஆகியோர் அரங்கை அலங்கரித்தனர்.

இந்த மாநாட்டின் முதன்மை உரையாளராக இலங்கை பசுமைக் கட்டுமானப் பேரவை (Green Building Council of Sri Lanka) யின் தலைவரும், பேராதனைப் பல்கலைக்கழக குடிசார் பொறியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க கலந்து கொண்டு “பசுமை சார் கண்டுபிடிப்புகளும், தொழில் முனைவுகளும் – Green Innovation and Entrepreneurship” என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றினர். ஆய்வு மாநாட்டுக்கென முன்வைக்கப்பட்ட 52 ஆய்வுகளில், ஏற்றுக்கொள்ளப்பட்ட 37 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந் நிகழ்வில், பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 684eb0babe439
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில்...

images 1 6
இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான்(Iran)- இஸ்ரேல் தாக்குதல் தீவிமைடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள...

25 684e82bd5233d
உலகம்செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக...