யாழ். மக்களுக்கு தொடருந்து திணைக்களம் மகிழ்ச்சி செய்தி
இலங்கைசெய்திகள்

யாழ். மக்களுக்கு தொடருந்து திணைக்களம் மகிழ்ச்சி செய்தி

Share

யாழ். மக்களுக்கு தொடருந்து திணைக்களம் மகிழ்ச்சி செய்தி

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு தொடருந்து ஒன்றை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த சொகுசு தொடருந்து சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார்.

குறித்த தொடருந்து, தினமும் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி இந்த தொடருந்து புறப்படவுள்ளது.

குறித்த தொடருந்தில் 8 முதலாம் வகுப்பு பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளன.

தொடருந்தில் முதல் வகுப்பிற்கான கட்டணம் 4,000 ரூபா என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...