யாழில் மாட்டு வண்டியில் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த சம்பவம் தெல்லிப்பளையில் இன்று இடம்பெற்றுள்ளது.
மல்லாகம் சந்தியில் இருந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
நாட்டில் எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விலையேற்றத்தை பிரதிபலிக்கும் முகமாகஆசிரியர்கள் பாடசாலைக்கு மாட்டு வண்டியில் சென்றுள்ளனர்.
#SriLankaNews