கனடாவிலிருந்து யாழ். வந்த அக்காவால் தங்கைக்கு நேர்ந்த கதி
இலங்கைசெய்திகள்

கனடாவிலிருந்து யாழ். வந்த அக்காவால் தங்கைக்கு நேர்ந்த கதி

Share

கனடாவிலிருந்து யாழ். வந்த அக்காவால் தங்கைக்கு நேர்ந்த கதி

யாழில் தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார்.

தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அளவெட்டி பகுதியில் நேற்றைய தினம் (21.07.2023) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவர், தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி என்பவற்றை தங்கையிடம் பாதுகாப்பாக வைக்குமாறு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (21.07.2023) தான் கொடுத்த நகைகளை தருமாறு தங்கையிடம் கோரியுள்ளார்.

எனினும் தங்கை தாலிக்கொடியை மாத்திரமே கையளித்துள்ளனர். சங்கிலி தொடர்பில் கேட்ட போது, சங்கிலி தரவில்லை தாலிக்கொடி மாத்திரமே தந்தாய் என தங்கை கூறியுள்ளார்.

அதனால் அக்கா – தங்கை மத்தியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குடும்பி பிடி சண்டையாக மாறியுள்ளது.

அதன் போது தங்கையின் முடியை அக்கா கத்தரித்ததையடுத்து, கத்தரிக்கப்பட்ட தனது தலைமுடியுடன், பொலிஸ் நிலையம் சென்ற தங்கை, தனது அக்கா மீது முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...