11 15
இலங்கைசெய்திகள்

யாழ். இந்து பழைய மாணவர்களால் உதவி திட்டம்

Share

யாழ். இந்து பழைய மாணவர்களால் உதவி திட்டம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2008ஆம் ஆண்டு பிரிவு – பழைய மாணவர்களால் – திருநெல்வேலியிலுள்ள சிறுவர் இல்லத்துக்கு கடந்த சனிக்கிழமை (27.07.2024) உதவி வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், 2008ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரம் கற்ற மாணவர்கள், ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ என்னும் தொனிப்பொருளில் தமது ஒன்றுகூடலை, யாழ். நகரிலுள்ள விடுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தியிருந்தனர். இதன்போது தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் மதிப்பளித்திருந்தனர்.

ஒன்றுகூடலின் ஓர் அங்கமாக சமூகநலத் திட்டமும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு அமைவாக திருநெல்வேலியிலுள்ள கருணாலயம் பெண்கள் சிறுவர் இல்லத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ஆடைகள் வழங்கப்பட்டன. அத்துடன் சிறுவர் இல்லத்துக்கு மதியபோசனத்துக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் இ.செந்தில்மாறன் பங்கேற்றிருந்தார். அவர் உத்தியோகபூர்வமாக ஆடைகளை, இல்லத்தினரிடம் கையளித்ததுடன், 2008ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களால் சிறுவர் இல்லப் பிள்ளைகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.

இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, பாடசாலை மாணவிகளின் சுயகற்றலுக்கு தேவையான உதவிகள் வழங்குவதாகக் கூறியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...