8787
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். கடலில் 12 கோடி ரூபா பெறுமதியான கேரளாக் கஞ்சா மீட்பு!

Share

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் 12 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளாக் கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்பகுதியில் கடற்படையினர் இன்று காலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது , சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்டனர்.

அதன்போது படகில் 15 சாக்குகளில் 225 பொதிகளில் சுமார் 492 கிலோ கிராம் கேரளாக் கஞ்சாவை மீட்டுள்ளனர். அதையடுத்து படகோட்டியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரையும் கைதுசெய்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகையும், கைதுசெய்யப்பட்ட இளைஞரையும் சட்ட நடவடிக்கைக்காகப் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...