ஜீவன் தியாகராஜா
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். மாநகர சபையைக் கலைக்க ஆளுநர் முயற்சி!

Share

யாழ். ஆரியகுளத்தில் வெசாக் தோரணங்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தீர்மானித்துள்ளார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் கடந்த சில தினங்களாக அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

ஆரியகுளத்தில் வெசாக் அலங்காரங்களை அமைப்பதற்கு படையினர், யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆரியகுளத்தில் எந்தவொரு மத அடையாளங்களுக்கும் இடமளிப்பது இல்லை என்று மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததால் அனுமதி வழங்க முடியாது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வடக்கு மாகாண ஆளுநர், வெசாக் அலங்காரங்களை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்று மாநகர சபை பதில் மேயரிடம் நேரடியாகக் கோரியிருந்தார். அதற்கு அமைவாக இணையவழியில் மாநகர சபை உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்போது முன்னரே அனுமதி கோரவில்லை என்றும், வேண்டுமென்றே வெசாக் அன்று அனுமதி கோரியதாகவும் குறிப்பிட்ட உறுப்பினர்கள் எழுத்துமூலம் அனுமதி கோரினால் ஆராயலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தனது உத்தரவை உதாசீனப்படுத்தியதால், மாநகர சபையை கலைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். அதற்குரிய வழிகாட்டல்கள் கொழும்பைத் தளமாகக் கொண்ட சில தரப்புக்களால் வழங்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

அதற்கு அமைவாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஒன்றை முன்னெடுக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகின்றது. இதற்காக சில ஓய்வுபெற்ற நீதிபதிகளையும் அவர் அணுகியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...