யாழ். மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கு எரிபொருள்!

299856977 745698496928014 8772727892376519585 n e1660654569376

அண்மையில் கடற்தொழிலாளர்களுக்கென எரிபொருள் விநியோகம் இடம்பெற்றபோது, யாழ் மாவட்ட மீனவர்களுக்கு குறைந்தளவு எரிபொருளே வழங்கப்பட்டதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு 25 லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையில், யாழ் மாவட்ட மீனவர்களுக்கு 6 லீற்றர் மட்டுமே வழங்கப்பட்டு ஓரங்கட்டபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் உரிய கவனமெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்தொழில் துறைமுகங்கள் அதிகார சபையினால் வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தை யாழ் மாவட்ட மீனவர்களுக்காக குருநகர் துறைமுக MPCS ஊடாக விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version