MediaFile 9 1100x619 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நிவாரண நிதி குளறுபடிக்கு அரச அதிகாரிகளே பொறுப்பு: யாழ் மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

Share

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு விநியோகத்தில், தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது தகுதியற்றவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டாலோ, அதற்கு அரச அதிகாரிகளே பொறுப்புகூற வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரம் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட (முற்றிலும் சேதமடைந்த, பகுதி சேதமடைந்த, அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட) அனைத்து வீடுகளுக்கும் இந்த ரூபா 25,000 உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், கிராம மட்ட அலுவலர்கள் நேரடியாகப் பிரிவுக்குச் சென்று தரவுகளைப் பெற்றுக்கொள்வதைப் பிரதேச செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

எனினும், இதில் குளறுபடிகள் ஏற்படின் அதற்குப் பிரதேச செயலாளர் உட்பட குறித்த பிரிவுக்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் ஆகியோர் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை இற்றைப்படுத்தி உறுதி செய்து கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் , மாவட்ட செயலாளரின் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...