செய்திகள்இலங்கை

திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ்.நீதிமன்று தடை

Share
யாழ்.நீதிமன்று தடையுத்தரவு scaled
Share

தமிழின விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.

நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபலின் நினைவிடத்தில் 34வது ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 26ம் திகதிவரை நடத்த ஏற்படாசெய்யப்பட்டது.

இந்நிலையில் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு யாழ்.தலைமையகப் பொலிஸாரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் திலீபனை நினைவுகூர மற்றும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நிகழ்வுகளை நடத்த முடியாது எனவும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தடை விதிக்க வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...