image
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். நிவாரண நிதியில் மோசடி இருந்தால் உடன் அறிவிக்கவும்: பாதிக்கப்பட்டோர் பெயர்ப் பட்டியல் வெளியீடு!

Share

‘டித்வா’ சூறாவளிப் பேரிடரில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்று இருந்தால் அது தொடர்பில் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் ரூபாய் 25,000 நிதியுதவி பெறத் தகுதியானவர்கள் எனத் தெரிவானோரின் பெயர்கள் அடங்கிய விபரம் இன்று (10.12.2025) முதல் பிரதேச செயலக ரீதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றினை பொதுமக்கள் எவரும் பார்வையிட முடியும்.

பாதிக்கப்பட்ட எவரேனும் ஒருவரின் பெயர் பட்டியலில் இணைக்கப்படாமல் இருந்தால் அல்லது தவறான வழியில் எவரேனும் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தால், அதுகுறித்து உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் 30ஆம் இலக்க அறையில் இயங்கும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் எஸ். கபிலன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புகார்களைத் தெரிவிக்கும்போது உரிய ஆதாரங்களுடன் அவற்றைத் தெரிவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...