இயக்கச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புதிய கட்டட தொகுதி திறந்துவைப்பு

இயக்கச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புதிய கட்டட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கத்துடன் விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் கணினி பயன்பாட்டினை ஏற்படுத்தும் வகையிலான வசதிகள், தண்ணீர் தொட்டிகள் ஆகிய உள்ளடங்கிய புதிய கட்டடத் தொகுதி இன்றைய தினம் வடக்கு மாகாண கல்வி செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டண தொகுதி அமைப்பதற்காக UNICEF மற்றும் KOICA ஆகியவற்றின் நிதி பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட கட்டிட தொகுதி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் சுந்தரம் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் UNICEF அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Emma Brigham,, KOICA நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதமர் செயலாளர் சமன் பந்துல சேன, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளர் உதயகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
IMG 20220726 WA0087
#SriLankaNews
Exit mobile version