நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவது மிக அவசியம் எனவும், நாட்டில் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு நிலையை உருவாக்கி உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும் எனவும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். .
வர்த்தக அமைச்சில் இன்று நடைபெற்ற உணவுப் பாதுகாப்புக் குழுவின் இரண்டாவது கூட்டத்தின்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அரிசி தட்டுப்பாடு ஏற்படுகின்றது. எனவே, உணவு இருப்பை முறையாக கையாண்டு, உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பொறிமுறை அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews