24 669227400e75e
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்கும் பணியில் சிக்கல்! கட்டணங்களில் வேறுபாடு

Share

வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்கும் பணியில் சிக்கல்! கட்டணங்களில் வேறுபாடு

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விவகாரத்தில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன என்று அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு கூட்டு நிறுவனத்துக்கு பொறுப்பாக்கியமை தொடர்பில் சமூக கட்டமைப்பில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தின.

இவ்விடயம் குறித்து அரச நிதி தொடர்பான குழுவில் விசாரணைகளை மேற்கொண்ட போது பல சிக்கல்களை எதிர்கொண்டோம். குழுவுக்கு முன்னிலையான அதிகாரிகள் எம்மை அலட்சியப்படுத்தும் வகையில் செயற்பட்டமை அதிருப்திக்குரியது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் முன்வைத்த விடயங்களை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். இந்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் சேவையை வி.எப்.எஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும், இந்த நிறுவனம் 145 நாடுகளில் சேவை வழங்குவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்த சேவை வி.எப்.எஸ். நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை மாறாக ஜி.பி.எஸ் என்று கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை முழுமையாக ஆராய்ந்து எமது அவதானிப்புக்களை முன்வைத்துள்ளோம்.போட்டித்தன்மையான விலைமனுக்கோரல் ஏதும் இல்லாத வகையில் தான் இந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.போட்டித்தன்மையான விலைமனுக் கோரலுக்கு சென்றிருந்தால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சிறந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

அத்துடன் விசா கட்டணம் குறித்து பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.ஒரு இடத்தில் 18.5 டொலர் என்றும் பிறிதொரு இடத்தில் 7.2 டொலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த செயற்திட்டம் 200 மில்லியன் டொலர் முதலீடு என்று அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது, ஆனால் முன்னெடுத்த அவதானிப்புக்களில் 200 மில்லியன் டொலர் அல்ல 200 மில்லியன் ரூபா என்று கூட குறிப்பிடப்படவில்லை.

தரவு கட்டமைப்பின் இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு உண்டு.இருப்பினும் இரகசிய தரவுகள் எவ்வாறு வெளியானது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. தரவு கட்டமைப்பின் இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினோம்.

கணக்காய்வு தலைமை அதிபதியினால் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விலை மனுக்கோரலை முழுமையாக தடயவியல் கணக்காய்வுக்கு உட்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளோம்.

2024 ஆம் ஆண்டு ஜூன் 04 ஆம் திகதி இடம்பெற்ற அரச நிதி தொடர்பான குழு கூட்டத்தில் கணக்காய்வு தலைமை அதிபதியினால் கணக்காய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த கணக்காய்வினை வெகுவிரைவில் நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...