15 22
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலை அடியோடு அழிக்க திட்டம்: ஈரானின் பகிரங்க அறிவிப்பு

Share

இஸ்ரேலை அடியோடு அழிக்க திட்டம்: ஈரானின் பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேல்(israel) – ஈரான்(iran) இடையே அணையாத தீ பிழம்பாக போர் பதற்றம் நிலவும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் வெளிப்படையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து அழிப்பதோடு இஸ்ரேலை மொத்தமாக சிதைப்பதற்குரிய திட்டத்தை வகுத்துள்ளோம் என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஈரானிய இராணுவத்தளபதி இப்ராஹிம் ஜபாரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் இராணுவத் தளபதி இப்ராஹிம் ஜபாரி கூறியதாவது, “சரியான நேரத்தில் இஸ்ரேலை தாக்க உள்ளோம். இதற்கான திட்டத்தை கையில் வைத்துள்ளோம்.

இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை அழிக்க இந்த திட்டம் கைக்கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பினால் இஸ்ரேல் – ஈரான் இடையே பெரிய போர் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு இஸ்ரேலும் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. இதுபற்றி இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்ததாவது,“யூதர்கள் வரலாற்றில் இருந்து பாடம் கற்கும் தன்மை கொண்டவர்கள்.

நம்மை அழிப்பது தான் குறிக்கோள் என்று எதிரி கூறினால் அதை நம்ப வேண்டும். இதனை வரலாற்றில் இருந்து யூத மக்களான நாங்கள் கற்று கொண்டுள்ளோம்.

எனவே ஈரானை திருப்பி அடிக்க நாங்களும் தயார் தான்” என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போது ஈரான் தொடர்ச்சியாக தனது படைபலம் குறித்த காணொளிகளை வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...