1 14
இலங்கைசெய்திகள்

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

Share

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தவிசாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மின்சார தடை தொடர்பான விரிவான விசாரணையை மின்சக்தி அமைச்சும் மேற்கொண்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால கூறியுள்ளர்.

இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக 2023 டிசம்பர் 9 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அதேபோன்ற சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

இவ்வாறனாதொரு பின்னணியில், இன்று ஏற்பட்ட மின்சார தடைக்கு கொத்மலையிலிருந்து பியகம வரையிலான மின்சார விநியோகக் கம்பியில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மீண்டும் இது தொடர்பான விரிவான விளக்கம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...