இலங்கைசெய்திகள்

மின் தடையினால் ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

Share
tamilni 156 scaled
Share

மின் தடையினால் ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

இலங்கை முழுவதிலும் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் இலங்கை மின்சார சபைக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஐந்து மணித்தியாலங்கள் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் சுமார் ஆறு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இந்த நட்டத்திற்கு தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதியும் இதேவிதமாக மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் இதனால் சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் நேரடியாக 6 பில்லியன் ரூபா நட்டமும், மறைமுகமாக 4 பில்லியன் ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...