24 664bea37c123c
இலங்கைசெய்திகள்

இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடிய ஈரான் நாட்டு மக்கள்

Share

இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடிய ஈரான் நாட்டு மக்கள்

ஈரானிய முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ஈரானிலுள்ள மற்றுமொரு தரப்பினர் அதனை கொண்டாடி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரைசியின் மரணத்தை பட்டாசு வெடித்தும், மது விருந்தளித்தும் கொண்டாடுவது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

ஈரான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ரைசி மிகவும் கொடூரமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். இஸ்லாமிய பழக்க வழக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈராக்-ஈரான் போரின் போது பிடிபட்ட கைதிகளை ரைசி கொடூரமாக தூக்கிலிட்டதாகவும், தனது எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக போராடியவர்களை கடுமையாக தண்டித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதனால் ஈரான் மக்கள் ரைசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக உள்ளூர் ஊடகங்களில் தொடர் கதைகள் வெளியாகி வருகின்றன.

இந்தப் பின்னணியில்தான் அவரது மரணத்தை ஈரான் மக்கள் கொண்டாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Screenshot 2025 04 03 155037 e1743676594629
செய்திகள்இலங்கை

கடும் இடிமின்னல் எச்சரிக்கை: இரவு 11 மணி வரை பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்!

இன்று (நவ 13) இரவு 11.00 மணி வரை கடும் இடிமின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால்...

1744128799 6195948 hirunews
செய்திகள்அரசியல்இலங்கை

வடக்கு, கிழக்கில் இராணுவ வசமுள்ள துயிலும் இல்லங்களை விடுவிக்க வேண்டும்; நினைவுகூர அரசு வழிவகுக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன்!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினர் வசம் உள்ள துயிலும் இல்லங்களை உடனடியாக விடுவித்து, அவற்றை...

1660822330330 690785 850x460
இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்காக அல்ல, அதிகாரத்தைக் கைப்பற்றவே: மொட்டுக் கட்சி மற்றும் UNP-ஐ நிராகரித்த வசந்த முதலிகே!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

passport 1200px 10 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

புல்மோட்டை வீதியோரத்தில் கைவிடப்பட்ட ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மீட்பு: மர்ம நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை!

புல்மோட்டை 13வது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த, இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை புல்மோட்டை...