24 664bec85e4c28
இலங்கைசெய்திகள்

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன் இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய பரிசு

Share

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன் இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய பரிசு

முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசீ, விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக இலங்கை விவசாய அமைச்சருக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அவர் இவ்வாறு உலோகத்திலான பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நேற்றைய தினம் இந்தப் பரிசுப் பொருள் அமைச்சர் அமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஈரான் ஜனாதிபதி உமாஓயா திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக இலங்கை விஜயம் செய்திருந்தார்.

இதன் போது ஈரானுக்கு விஜயம் செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அமரவீர ஈரானுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் பின்னர் இந்த விசேட பரிசுபொருளை அமரர் ரைசீ இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சினால் இந்த பரிசுப்பொருள் மஹிந்த அமரவீரவிற்கு வழங்கப்பட்டது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...