24 66207617d18a1
இலங்கைசெய்திகள்

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு!

Share

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு நேற்றும், நேற்று முன்தினமும் விஜயம் செய்து அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறு தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போதான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் நேற்றைய தினம் ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்திருந்தனர்.

ஈரானிய ஜனாதிபதி எதிர்வரும் 24ம் திகதி மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கி, உமா ஓயாவிற்கு விஜயம் செய்வார் எனவும் அதே தினம் அவர் மீண்டும் நாடு திரும்ப உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போதான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தலைமையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவுப் பிரிவுகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது அனைத்து புலனாய்வுப் பிரிவுகளும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் ஈரானிய ஜனாதிபதி ஒருவர் இலங்கை விஜயம் செய்திருந்தார்.

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அப்போதைய ஈரான் ஜனாதிபதி அஹமட் நிஜாட் ஆகியோர் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை அமெரிக்க தூதரக மட்டத்தில் அதிகாரபூர்வமாக இதுவரையில் எதிர்ப்பு வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...