இலங்கைசெய்திகள்

ஐபிஎல் 2025 தொடர்: ஏலப்பட்டியலில் 29 இலங்கை வீரர்கள்

Share
24 2
Share

ஐபிஎல் 2025 தொடர்: ஏலப்பட்டியலில் 29 இலங்கை வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் பதிவுகள் 2024 நவம்பர் 4ஆம் திகதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக பிசிசிஐ(BCCI) அறிவித்துள்ளது.

இதன்படி 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் 1574 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வெளிநாட்டு வீரர்களாக, 29 இலங்கை வீரர்களும் காணப்படுகின்றனர்.

இதனை தவிர ஆப்கானிஸ்தானின் 29 பேரும்,அவுஸ்திரேலியாவின் 76 பேரும், பங்களாதேஸின் 13 பேரும், கனடாவின் 3 பேரும், இங்கிலாந்தின் 52 பேரும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன், அயர்லாந்தின் 9 பேரும் இத்தாலியின் 1 வீரரும், நெதர்லாந்தின் 1 வீரரும் , நியூஸிலாந்தின் 39 பேரும், ஸ்கொட்லாந்தின் 2 பேரும், தென்னாபிரிக்காவின் 91 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் 1 வீரரும், அமெரிக்காவின் 10 பேரும், மேற்கிந்திய தீவுகளின் 33 பேரும், சிம்பாப்வேயின் 8 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இந்தநிலையில், சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...