இலங்கைசெய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

Share
9 20
Share

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா? என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடலுக்கு வவுனியா பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த அமைப்பினால் நேற்று (30.07.2024) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சில சிவில் அமைப்புகளும் தமிழ் தேசியப் பரப்பில் உள்ள சில கட்சிகளும் ஒன்றிணைந்து எடுத்துள்ள தமிழ் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பான நிலைப்பாடு சாத்தியமானதா என்பது தொடர்பில் வவுனியா பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து வவுனியா மக்களினுடைய நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அது தொடர்பிலான கருத்துக்கணிப்பை மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் தமிழ் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் செயற்பட்டு வரும் சிவில் அமைப்புகள் சிலவும் தமிழ் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் சிலவும் வவுனியா பொது அமைப்புக்களுடன் எவ்விதமான கலந்துரையாடலையும் மேற்கொள்ளாத நிலையில்,

இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்ற ரீதியில் ஆக்கபூர்வமான செயல் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கோடு தற்காலத்தில் தமிழர்களின் அரசியல் இரும்புக்கு தமிழ் பொது வேட்பாளரின் தேவை அவசியமானதா என்பது தொடர்பான கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 3 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வாடி வீட்டில் இடம்பெறவுள்ளது.

எனவே ஆர்வமுள்ள தமிழ் அரசியல் பரப்பில் செயற்பாடு உள்ளவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அழைத்து நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...