29
இலங்கைசெய்திகள்

பசிலுக்கு எதிரான இரகசிய நகர்வுகள் ஆரம்பம்! விரைவில் சிக்கலாம்

Share

பசிலுக்கு எதிரான இரகசிய நகர்வுகள் ஆரம்பம்! விரைவில் சிக்கலாம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச(Basil Rajapaksa) தொடர்பான விசாரணைகள் தற்போது மிகவும் இரகசியமான முறையில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஷில் ராஜபக்‌சவின் சொத்துக்கள், அவற்றை முதலீடு செய்துள்ள இடங்கள், சேமிப்புகள், வீடு உள்ளிட்ட அசையாச் சொத்துக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் மிகத் தீவிரமாக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் ஒருகட்டமாக பசில் ராஜபக்‌சவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், முக்கிய அதிகாரிகள் போன்றோரிடம் அண்மைக்காலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் சர்வதேச பிடியாணை பெறக்கூடிய வகையில் மிக விரைவில் பசில் ராஜபக்‌சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுப்பதற்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் சட்ட மா அதிபருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயம் குறித்து முக்கியமாக கேட்டறிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே எந்தவொரு விசாரணைக்காகவும் இலங்கைக்குத் தான் வரப்போவதில்லை என்று பசில் ராஜபக்‌ச தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Share
தொடர்புடையது
44539899 pakistan
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு!

பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இலங்கை...

sabarimala 2025 11 be56e17ca03c9aed28b89ec1142a3bf0 3x2 1
செய்திகள்இந்தியா

சபரிமலை கோயில் தங்கத் திருட்டு வழக்கு: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவர் கைது!

கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்ற தங்கத் தகடு மற்றும் தங்கக் கவசத் திருட்டு...

1735896199 Police L
செய்திகள்அரசியல்இலங்கை

நாடே ஒன்றாக விசேட நடவடிக்கை: 47,000-க்கும் அதிகமானோர் கைது; 1,000 கிலோவுக்கும் அதிக ‘ஐஸ்’ மீட்பு!

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நாடே ஒன்றாக’ தேசிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ்,...