இலங்கைசெய்திகள்

ரணில் – சஜித் – அனுர ஆகியோருக்கு தென்னிலங்கை ஊடகங்கள் அழைப்பு

24 661373ac018c5
Share

ரணில் – சஜித் – அனுர ஆகியோருக்கு தென்னிலங்கை ஊடகங்கள் அழைப்பு

தமது பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் மற்றும் உறுதிமொழிகள் குறித்து நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தென்னிலங்கையின் இரு ஊடகங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தாம் வெற்றி பெற்றால் நாடு முன்னேறும் என்ற அடிப்படையிலேயே இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

இந்த விவாதம் நேரடியாக இணையத்தளங்களில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு மூன்று அரசியல் தலைவர்களையும் கோரும் முறையான அழைப்பிதழ் விரைவில் அனுப்பப்படவுள்ளதோடு மேலும் அழைப்பிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அது தொடர்பில் வாசகர்களுக்கு அறிவிக்கப்படும்.

விவாதம் நடத்துவதற்கான திகதி மற்றும் நேரம் என்பனவும் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...