செய்திகள்இலங்கை

யாழில் கடமைக்கு இடையூறு! – பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

Share
gun
Share

யாழ்ப்பாணத்தில் கடமைக்கு ஒத்துழைக்க மறுத்து இடையூறு ஏற்பட்டதால் பொலிஸார் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்க்க வேண்டி சம்பவம் ஊரெழு பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக் கவசம் இன்றி ஆபத்தான வகையில் பயணித்துள்ளனர்.

அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்று அவர்களுக்குத் தண்டப்பத்திரம் எழுத முற்பட்டபோது அவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.

அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். அவர் பொலிஸாருடன் வரம்பு மீறிச் செயற்பட்டதை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்தனர்.

அத்துடன், அவர்களை எச்சரித்ததாகத் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...