சர்வதேச அமைப்பு முறைப்பாடு! – சிங்கப்பூரில் கைதாவாரா கோட்டா?

Gotabaya Rajapaksa

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அமைப்பு ஒன்றின் செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த நாட்டின் உள்நாட்டுப் போரின் போது கோட்டாபய ராஜபக்ச செயற்பட்ட விதத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்யுமாறு கோரிகை முன்வைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது, ​​பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறியதாக முறைப்பாட்டைத் தாக்கல் செய்த “சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம்” என்ற குழு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version