tamilni 214 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசின் கொடூரங்களுக்கு சர்வதேச நீதியே வேண்டும் – கஜேந்திரன்

Share

தமிழ் மக்களை இலக்கு வைத்து அரசு நிகழ்த்திய கொடூரங்களுக்குச் சர்வதேச நீதி கட்டாயம் வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி முறைமை அழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இந்த நாட்டில் 70 வருடங்களாக இனப்பிரச்சினை இருந்து வருகின்றது. தமிழர்களுக்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்களால் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், பயங்கரவாதம் எனக் கூறி எல்லா விடயங்களையும் மறைக்க முடியாது. இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த உண்மை ஏற்கப்பட்டு ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். ஒற்றையாட்சி முறைமை அழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.

அதன்மூலமே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...