8 1
இலங்கைசெய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இனி யாழ்ப்பாணத்தில்..

Share

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை உருவாக்கும் பாரிய எதிர்பார்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முதலாம் தவணைக் காலம் பூர்த்தியாகும் முன்னதாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் போட்டியொன்றை நடத்த வேண்டும் என்பது தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

எமது தலைமுறையினர் போர் புரிந்ததாகவும் அடுத்த தலைமுறையினருக்கு போர் இல்லாத ஓர் நாட்டை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கம் தராதரம் பாராது குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதிமொழி வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...