33
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்காக வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் இலங்கையர்கள் – விமான நிலையத்தில் கசிந்த உண்மை

Share

அரசியல்வாதிகளுக்காக வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் இலங்கையர்கள் – விமான நிலையத்தில் கசிந்த உண்மை

இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படவில்லை என விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக வாக்களிக்க மக்கள் நாடு திரும்புகிறார்கள் என தகவல்கள் வெளியாகின.

எனினும் அந்தளவு அதிகரிப்பான பயணிகள் இதுவரை வரவில்லை என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தமது நிறுவனத்தின் மேலதிக விமானங்களை இலங்கைக்கு மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு விமான நிறுவனமும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பல தனியார் விமானங்கள் இலங்கை ஊடாக பயணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதைத் தவிர வேறு எந்த கூடுதல் விமானங்களும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் இதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பாரியதொரு மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...